Monday 5 February 2018

நீங்கள் செல்வ செழிப்போடு இருக்க இதை செய்யுங்கள்

நீங்கள் செல்வ செழிப்போடு இருக்க இதை செய்யுங்கள்........

வட நாட்டில் 10க்கு 10 சதுர அடியில் கடை வைத்துக் கொண்டு மாதம் 3 கோடி வரை தொழிலில் லாபம் பார்க்கின்றார்கள்!
ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் நம்மில் பலர் 4000 சதுர அடியில் கடை வைத்திருந்தாலும் மாதம் 3 லட்ச ரூபாய்கள் கூட லாபம் சம்பாதிப்பதில்லை;
பின்வரும் சுயபரிகாரத்தை மாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான வளர்ச்சியையும்,செல்வ வளத்தையும் பெறுங்கள்........
சுயதொழில் செய்யும் ஒவ்வொருவரும் மகம் நட்சத்திரம் வரும் நாளன்று உங்கள் ஊரில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்லுங்கள்!
விநாயகர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
நாராயணர் கோவிலாக இருந்தாலும் சரி;
சிவாலயமாக இருந்தாலும் சரி;
நரசிம்மர் ஆலயமாக இருந்தாலும் சரி;
பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அம்பாள் ஆலயமாக இருந்தாலும் சரி;
அபிஷேகம் நடைபெறும் போது அந்த தண்ணீரை கோமுகம் வழியாக வெளியேறும் போது பிடிக்க வேண்டும்;
நமது அலுவலகத்தில் தெளிக்க வேண்டும்;மகம் நட்சத்திரம் முடிவதற்குள் தெளிக்க வேண்டும்;

No comments:

Post a Comment