Thursday 22 October 2020

பழமொழிகள்

 தவளை கத்தினால் தானே மழை

*அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்
*தும்பி பறந்தால் தூரத்தில் மழை
*எறும்பு ஏறில் பெரும் புயல்
*மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
*தை மழை நெய் மழை
*மாசிப்பனி மச்சையும் துளைக்கும்
*தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
*புத்துகண்டு கிணறு வெட்டு
*வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய்
*காணி தேடினும் கரிசல்மண் தேடு
*களர் கெட பிரண்டையைப் புதை
*கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
*நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு
*நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்
* ஆடிப்பட்டம் பயிர் செய்
*விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
*மழையடி புஞ்சை மதகடி நஞ்சை
*களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
* உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ
*அகல உழவதைவிட ஆழ உழுவது மேல்
*புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு
*குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
*ஆடுபயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்
*கூளம் பரப்பி கோமியம் சேர்
*ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
*நிலத்தில் எழுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
*காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
*தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்
*கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை
*சொத்தைப்போல் விதையை பேனவேண்டும்
*விதை பாதி வேலை பாதி
*காய்த்த வித்திற்கு பழுதில்லை
*பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு
*கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது
*ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
*கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும் அடர விதைத்தால் போர் உயரும்
*விதைகள் ஆழப் புதைப்பது பழுதாம்
ஆயிரம் கால பயிர் நெல்லுக்கு ஒரு அந்து

No comments:

Post a Comment