Friday 4 April 2014

ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று திருவிளக்கு வழிபாட்டை மேற்கொண்டால் ஒவ்வொரு கோரிக்கைகளாக நிறைவேறும். மேலும் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது பாவங்கள் அகலும்.

சித்திரை மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றினால் தானியம் பெருமளவில் கிடைக்கும்.

வைகாசி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் செல்வ வளம் மேலோங்கும்.

ஆனி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் விவாகப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

ஆடி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

ஆவணி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

புரட்டாசி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் பசுக்கள் விருத்தியாகும்.

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

கார்த்திகை மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் நிலைத்த புகழ் கிடைக்கும்.

மார்கழி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.

தை மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

மாசி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

பங்குனி மாத பவுர்ணமி அன்று விளக்கேற்றி வழிபட்டால் தங்கு தடைகள் அகலும். சகல பாக்கியமும் கிடைக்கும்

No comments:

Post a Comment